பாத்திரம்
நிறைய வழிகின்றன
வறுமையும் வெறுமையும்
விடிந்ததும்
நகர்கிறது
ஒரு வாழ்வு
வழக்கமாய் கெஞ்சலுக்கும்
பெறுதலுக்குமிடையே
அழுகைக்குப் பிறகு
தூக்கியெறியப்படும்
சில்லறைகள் அல்ல
மிக ஆபத்தான கழிவிரக்கம்
அடிவயிற்றிலிருந்து
சேகரிக்கப்பட்டு
தரப்படுகின்றன
ஒரு சோற்று பருக்கைக்கான
வேண்டுதல்கள்
முகம் முழுக்க
நிறைந்த பரிதாபங்களை
மறவாமல் அள்ளி செல்லுங்கள்
நீங்கள் போடும்
கொஞ்சம் சில்லறைகளுக்காக
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
ஒவ்வொருவரின் கதைகளும் கால்கள் முளைத்து அலைந்து கொண்டிருகின்றன வாழ்வெனும் வெளியில் ஒற்றைக் கவிதையின் வரிகளாக
Friday, May 7, 2010
Thursday, April 29, 2010
கவிதை: அடைவதும் பெறுவதும்
1
ஆழ்மனதை
அடைய
அடைய
அடைய
அடைய
எல்லாமுமாக ஆயிருந்தேன்.
2
கோபத்துடனும்
பொறாமையுடனும்
பேராசையுடனும்
காழ்ப்புணர்ச்சியுடனும்
கொலையுணர்வுடனும்
அவர்கள் தூக்கி எறிந்த
அத்துனை சொற்களையும்
புணர வேண்டியிருந்தது.
3
புறக்கணிக்கப்பட்டவர்கள்
தனக்கென ஒரு கதைப்பாத்திரத்தை
வேண்டி
மீண்டும் மகாபாரதத்திற்குள்ளும்
இராமாயணத்திற்குள்ளும்
காப்பியங்களுக்குள்ளும்
நுழைந்து
ஆளுக்கொரு வரலாறை
புனைந்துகொண்டார்கள்.
4
மௌனத்திற்குள்
ஆழ்ந்து கிடக்கும்போது
ஒரு சொல் கிடைக்கிறது.
அதைக் கொண்டு மீண்டும்
மௌனத்திலிருந்து விடுப்படக்கூடும்.
மீண்டும் அந்தச் சொல்லைத்
தொலைப்பதன் மூலம்
மீண்டும் ஒரு மௌனத்தை அடையலாம்.
சொல்லின் பெயர் “நான்”
கே.பாலமுருகன்
மலேசியா
Friday, April 2, 2010
கவிதை: விவாதத்திற்குத் தயாராகுதல்
சக பணியாளர்களிடமும்
யாரிடமும்
விவாதிப்பதற்கு முன்பதாகவே
அன்றைய இரவு
சொற்களைத் தேர்வுசெய்ய வேண்டியுள்ளது.
கற்பனை வளம்
வாதத்திறமை
எதிர்தொனி
மொழிவளம்
இலக்கண கட்டமைப்பு
என்கிற அத்துனை
வரயறைகளையும் கொண்ட
சொற்கள் தேவைப்படுகின்றன
எதிர்பிரதியின் கருத்துகளைத்
முடமாக்க.
விவாதிப்பதற்கு அமரும் முன்
எல்லாம்வகையான தீர்மானங்களையும்
கொண்கிருக்கும் சொற்கள்
முன்னால் இருப்பவரை
வசப்படுத்த மெல்ல மெல்ல
வன்முறையைக் கையாளும்.
அர்த்தமற்ற ஒரு புள்ளியை
வந்தடையும்போது
நமது சொற்கள்
எதிர்பிரதியின் தொண்டைக்குள்
நுழைந்து அவரை
நமதாக்கியிருக்கும் அல்லது
சோர்வடையும் வகையில்
சலிப்பைக் கசிந்திருக்கும்.
எங்கு முடிவடையும்
என்கிற முடிவில்லாத தொடர்ச்சியில்
சொற்கள் கட்டமைத்த
சார்பின் பிரதி
சுயத்தையும் எதிர்பிரதியையும்
தோற்கடித்திருக்கும்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
.
Saturday, March 13, 2010
கவிதை: சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்
கரைந்து காணாமல்
போவதற்குரிய அத்துனை
சாத்தியங்களையும்
கற்றுக் கொண்டன
சொற்கள்.
உங்களின்
கவிதைகளிலிருந்தும்
கட்டுரைகளிலிருந்தும்
சிறுகதைகளிலிருந்தும்
நாவல்களிலிருந்தும்
எப்பொழுது வேண்டுமானாலும்
சொற்கள் காணாமல்
போகக்கூடும்.
நீங்கள் குறிப்பிடும்
கலை என்கிற மாபெரும்
ஆவணங்களிருந்து
உதிர்ந்த சொற்கள்
எல்லாவற்றையும் வெறும்
காகிதங்களாக மாற்றக்கூடும்.
உங்களின் கதைக்குள்
இருக்கும் கதைப்பாத்திரங்கள்
காகிதம் முழுக்க
நிரம்பியிருக்கும்
சொற்கூட்ட்ங்களை
விழுங்க முயற்சிக்கும்
தருணத்தில் தங்களின் படைப்புலகம்
சிதையத்துவங்கும்.
உங்கள் நாவலின்
எதிர் உருவாக்கங்களும்
முரண் பாத்திரப்படைப்புகளும்
இழந்த அறங்களை சொற்சிதைவிலிருந்து
மீண்டும் பெற்று
உங்களின் அறத்திற்கு எதிராக
எல்லாம் வன்முறைகளையும்
நிகழ்த்தக்கூடும்.
நீங்கள் புதைத்து வைத்திருக்கும்
கதையின் மையத்தைத் திருடும் சொற்கள்
அதைக் கதையின் தொடக்கத்தில்
புனைந்து
உங்கள் கதையின் வலிமையை
உடைக்கக்கூடும்.
உங்கள் கட்டுரைகளில்
வலிந்து புகுத்தப்படும்
தத்துவங்களும் வியாக்கியானங்களும்
தமது சொற்களை பகிர்ந்துகொண்ட பிறகு
அர்த்தமற்ற ஒரு வாக்கியமாக
தேங்கிவிடக்கூடும்.
எல்லாமும் நிகழ்ந்துவிட்டபிறகு
வெறும் மௌனமும் வெறுமையும்
மீந்திருக்கும் ஒரு பிரதியை
மட்டும் உங்களிடம் கொடுத்திருக்கக்கூடும்
சொற்கள்.
சொற்களின்றி
எதைப் புனைவதென்ற
விரக்தியில்
மாபெரும் மௌனம்
அடர்ந்திருக்கும்
உங்களுக்குள்ளும்
உங்களுக்கு வெளியேயும்
காட்சிகளை உதிர்த்த
வெறும் ஓவியமாக.
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
போவதற்குரிய அத்துனை
சாத்தியங்களையும்
கற்றுக் கொண்டன
சொற்கள்.
உங்களின்
கவிதைகளிலிருந்தும்
கட்டுரைகளிலிருந்தும்
சிறுகதைகளிலிருந்தும்
நாவல்களிலிருந்தும்
எப்பொழுது வேண்டுமானாலும்
சொற்கள் காணாமல்
போகக்கூடும்.
நீங்கள் குறிப்பிடும்
கலை என்கிற மாபெரும்
ஆவணங்களிருந்து
உதிர்ந்த சொற்கள்
எல்லாவற்றையும் வெறும்
காகிதங்களாக மாற்றக்கூடும்.
உங்களின் கதைக்குள்
இருக்கும் கதைப்பாத்திரங்கள்
காகிதம் முழுக்க
நிரம்பியிருக்கும்
சொற்கூட்ட்ங்களை
விழுங்க முயற்சிக்கும்
தருணத்தில் தங்களின் படைப்புலகம்
சிதையத்துவங்கும்.
உங்கள் நாவலின்
எதிர் உருவாக்கங்களும்
முரண் பாத்திரப்படைப்புகளும்
இழந்த அறங்களை சொற்சிதைவிலிருந்து
மீண்டும் பெற்று
உங்களின் அறத்திற்கு எதிராக
எல்லாம் வன்முறைகளையும்
நிகழ்த்தக்கூடும்.
நீங்கள் புதைத்து வைத்திருக்கும்
கதையின் மையத்தைத் திருடும் சொற்கள்
அதைக் கதையின் தொடக்கத்தில்
புனைந்து
உங்கள் கதையின் வலிமையை
உடைக்கக்கூடும்.
உங்கள் கட்டுரைகளில்
வலிந்து புகுத்தப்படும்
தத்துவங்களும் வியாக்கியானங்களும்
தமது சொற்களை பகிர்ந்துகொண்ட பிறகு
அர்த்தமற்ற ஒரு வாக்கியமாக
தேங்கிவிடக்கூடும்.
எல்லாமும் நிகழ்ந்துவிட்டபிறகு
வெறும் மௌனமும் வெறுமையும்
மீந்திருக்கும் ஒரு பிரதியை
மட்டும் உங்களிடம் கொடுத்திருக்கக்கூடும்
சொற்கள்.
சொற்களின்றி
எதைப் புனைவதென்ற
விரக்தியில்
மாபெரும் மௌனம்
அடர்ந்திருக்கும்
உங்களுக்குள்ளும்
உங்களுக்கு வெளியேயும்
காட்சிகளை உதிர்த்த
வெறும் ஓவியமாக.
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
Friday, February 19, 2010
ஒரு வானமும் சில மழைக்காலங்களும்
மூதாதையர்களின் சிரிப்பொலிகளை
இரவுநேர கதைகளை
ஜெனரேட்டர் ஒலிகளை
நெல்லிக்காய் மரத்திற்காக மழைக்காலத்தில்
வந்துசேரும் பறவைகளை
அடிக்கடி தவறவிடும் வெளிச்சங்களை
தாத்தாவின் குரட்டை சப்தங்களை
வெளிக்கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும்
அம்மாச்சியின் உடைகளை
மரத்தோம்பு வாளியின் நீர் மேற்பரப்பில்
எப்பொழுதும் மிதக்கும் ஒரு வானத்தை
எல்லாவற்றையும் விழுங்கிய மீதமாக
இறந்தகாலத்தின் ஓசைகளாக
இன்றும் நெளிகிறது ஒரு பழங்கிணறு.
நெல்லிக்காய் மரத்திலிருந்து
இன்று உதிரக்கூடும்
முன்பிருந்த
ஒரு வானமும் சில மழைக்காலங்களும்
நாய்க்குட்டியும் நானும்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
இரவுநேர கதைகளை
ஜெனரேட்டர் ஒலிகளை
நெல்லிக்காய் மரத்திற்காக மழைக்காலத்தில்
வந்துசேரும் பறவைகளை
அடிக்கடி தவறவிடும் வெளிச்சங்களை
தாத்தாவின் குரட்டை சப்தங்களை
வெளிக்கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும்
அம்மாச்சியின் உடைகளை
மரத்தோம்பு வாளியின் நீர் மேற்பரப்பில்
எப்பொழுதும் மிதக்கும் ஒரு வானத்தை
எல்லாவற்றையும் விழுங்கிய மீதமாக
இறந்தகாலத்தின் ஓசைகளாக
இன்றும் நெளிகிறது ஒரு பழங்கிணறு.
நெல்லிக்காய் மரத்திலிருந்து
இன்று உதிரக்கூடும்
முன்பிருந்த
ஒரு வானமும் சில மழைக்காலங்களும்
நாய்க்குட்டியும் நானும்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
Friday, February 12, 2010
திரும்பவும் ஒரு பறவை
சுவர்களில் படிந்திருந்த
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் சில அவசரங்களுடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்று கொண்டிருந்த
நிர்பந்தத்தில்
நேற்றைய அனுபவங்களும் இரைச்சல்களும்
பெரும் கூச்சலுடன்
ஒரு பறவையைப் போல
நகரம் திரும்புகிறது
மீண்டும் முதலிலிருந்து
அடுக்கத் துவங்கினேன்
தொலைந்தவர்கள் பற்றியும்
தொலைத்தவர்கள் பற்றியும்
தவறவிட்ட
சிறகுகளையும் உறவுகளையும்
எடுத்துச் செல்ல
நகரத்திற்குள் வந்திருக்கும் பறவை
கொத்திக் கொத்தித் தின்றது
பரபரப்பையும் சாமான்யனின் அவசரத்தையும்
(2010- மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசும் எம்.ஏ இளஞ்செல்வன் கோப்பையையும் வென்ற கவிதை)
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் சில அவசரங்களுடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்று கொண்டிருந்த
நிர்பந்தத்தில்
நேற்றைய அனுபவங்களும் இரைச்சல்களும்
பெரும் கூச்சலுடன்
ஒரு பறவையைப் போல
நகரம் திரும்புகிறது
மீண்டும் முதலிலிருந்து
அடுக்கத் துவங்கினேன்
தொலைந்தவர்கள் பற்றியும்
தொலைத்தவர்கள் பற்றியும்
தவறவிட்ட
சிறகுகளையும் உறவுகளையும்
எடுத்துச் செல்ல
நகரத்திற்குள் வந்திருக்கும் பறவை
கொத்திக் கொத்தித் தின்றது
பரபரப்பையும் சாமான்யனின் அவசரத்தையும்
(2010- மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசும் எம்.ஏ இளஞ்செல்வன் கோப்பையையும் வென்ற கவிதை)
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
Tuesday, December 15, 2009
கவிதை: எதிர் அழகியல்
நெடுந்தூரப் பயணம்போல
நீண்டு கொண்டிருந்தது
எங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த உரையாடல்.
பெரும்பான்மை நுகர்வாளர்களின்
திருப்திக்குரிய பொருளாக மட்டுமே
கற்பிக்கப்பட்ட அழகியலை
உடைக்க நேர்ந்ததன்
விளைவுதான் எதிர் அழகியல்
எனக் கொண்டாடப்பட்டது.
என் முகங்களின் மீது
படர்ந்திருந்த பாவிக்கப்பட்டிருந்த
மேல்தட்டு அழகியலின் சாயல்கள்
மெல்ல உதிர்ந்தன
உரையாடலின் புரிதலைச் சாத்தியப்படுத்த.
சம்பாஷனைக்குப் பிறகு
விடைப்பெற்ற நண்பர்கள்
பாதைநெடுக கழற்றி எறிந்தார்கள்
அழகியலையும் அதன் முகமூடிகளையும்.
இப்பொழுது புதியதாக
ஓர் எதிர் அழகியல்.
ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
நீண்டு கொண்டிருந்தது
எங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த உரையாடல்.
பெரும்பான்மை நுகர்வாளர்களின்
திருப்திக்குரிய பொருளாக மட்டுமே
கற்பிக்கப்பட்ட அழகியலை
உடைக்க நேர்ந்ததன்
விளைவுதான் எதிர் அழகியல்
எனக் கொண்டாடப்பட்டது.
என் முகங்களின் மீது
படர்ந்திருந்த பாவிக்கப்பட்டிருந்த
மேல்தட்டு அழகியலின் சாயல்கள்
மெல்ல உதிர்ந்தன
உரையாடலின் புரிதலைச் சாத்தியப்படுத்த.
சம்பாஷனைக்குப் பிறகு
விடைப்பெற்ற நண்பர்கள்
பாதைநெடுக கழற்றி எறிந்தார்கள்
அழகியலையும் அதன் முகமூடிகளையும்.
இப்பொழுது புதியதாக
ஓர் எதிர் அழகியல்.
ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
Subscribe to:
Posts (Atom)










