Friday, September 16, 2011

கவிதை: பொருந்தாத காலணி


1

அடுத்த வருடம் என் கால்கள்
வளர்ந்துவிடும் எனச் சொல்லி
அம்மா வாங்கிக் கொடுத்த
பொருந்தாத காலணிக்குள்
ஒவ்வொரு வருடமும் ஒரு இன்ச்
இடைவெளி அப்படியே இருக்கிறது.


2

நடக்கத் துவங்கிய வயதில்
தொந்திமாமாவின் பெரிய சிலிப்பர்
முத்து பெரியப்பாவின் வெளிக்காட்டு சப்பாத்தி

Sunday, September 11, 2011

கவிதை: கடைசி முத்தம்

கடைசி முத்தம்
கொடுக்கும்போதும்
பெறும்பொழுதும்
நடுக்கமாக இருக்கிறது.

கடைசி முத்தத்தில் ஈரத்தைவிட
பயமும் வலியும் துயரமும்
நிரம்பியிருக்கின்றன.

Thursday, September 1, 2011

கவிதை: ஒரு புகைப்படத்தில் நிகழ்ந்த மரணம்


1
இப்பொழுது நீங்கள்
பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில்
முன்பொருமுறை நானும் இருந்தேன்.

2
புகைப்படத்தைப் பார்த்துவிட்டு
வைப்பதற்கு முன்பாக
நான் உங்களிடம் அதில் காணாமல் போயிருக்கும்
என்னைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

3
ஒரு புகைப்படத்திலிருந்து
காலியாவதை நான் எப்பொழுதும் விரும்பியதில்லை.
ஆனாலும் துரத்தப்படுவதற்கு முன்
வெளியேற வேண்டியுள்ளது.

Tuesday, August 2, 2011

கவிதை: சத்தத்தின் வரலாறு

இரண்டாம் உலகப் போரில்
குண்டு பாய்ந்து செத்தொழிந்துபோன
போர் வீரர்களின் சத்தங்கள்
என் அறைக்குள் கேட்கத் துவங்கியதுபோது
அன்று 15.07.2011.

வெகுநாட்களுக்குப் பிறகு
தேநீர் காய்ந்து போன
குவளையின் மூடியை அகற்றும்போது
அதிலிருந்து கேட்ட குரல்

Tuesday, June 21, 2011

கவிதை: போர் முடிந்தது

சுவரோரம் வந்து நின்ற
சிறுமியின் கால்களில்
ஒட்டியிருந்தது போர்.

பாத வெடிப்புகளில்
ஒளிந்திருந்தார்கள்
போர் வீரர்கள்.

தரைப்புழுதியிலிருந்து
போர் ஆரம்பமாகும்
எச்சரிக்கை.

Monday, May 16, 2011

கவிதை: மேசையின் மீதிருந்த வாக்கியம்

பருகிவிட்டு அரைநீருடன்
வைக்கப்படிருந்த கண்ணாடி குடுவையும்
தலைக்கு மேல் எரியும்
மஞ்சள் விளக்கும்
ஒரு தனிமையான மேசையும்.

நானும் அவளும்
நீண்ட நேரம்
கவனித்துக்கொண்டிருந்த மேசைக்கு
12 வயதாவது இருக்கக்கூடும்.

Wednesday, April 20, 2011

கவிதை: நாட்டியம்

இரு பக்க புருவத்தையும் வளைத்து
கால்களை ஒருமுறை தரையில்
உதறிவிட்டு
என்னைப் பார்த்தாள்.

தொடை இரண்டையும்
மாற்றி மாற்றி அந்தரத்தில் வைத்து
உடலைச் சாய்த்தாள்.

பாடலின் ஒவ்வொரு முடிவிலும்
நிசப்தம் பரவ
அவளுடைய கண்கள்
உக்கிரமடைந்தன.