Friday, May 7, 2010

பாத்திரமும் சூத்திரமும்

பாத்திரம்
நிறைய வழிகின்றன
வறுமையும் வெறுமையும்

விடிந்ததும்
நகர்கிறது
ஒரு வாழ்வு
வழக்கமாய் கெஞ்சலுக்கும்
பெறுதலுக்குமிடையே

அழுகைக்குப் பிறகு
தூக்கியெறியப்படும்
சில்லறைகள் அல்ல
மிக ஆபத்தான கழிவிரக்கம்

அடிவயிற்றிலிருந்து
சேகரிக்கப்பட்டு
தரப்படுகின்றன
ஒரு சோற்று பருக்கைக்கான
வேண்டுதல்கள்

முகம் முழுக்க
நிறைந்த பரிதாபங்களை
மறவாமல் அள்ளி செல்லுங்கள்
நீங்கள் போடும்
கொஞ்சம் சில்லறைகளுக்காக

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா