Friday, July 23, 2010

நதியெனும் நதி

உன் கண்களுக்குள்
ஆழமாகச் சென்றுவிட்ட பிறகு
அது பெரும் நதியாய் மிதந்துகொண்டிருப்பதைக்
கண்டேன்.
நீந்துவதற்கான எந்த முனைப்புமின்றி
மிதத்தலில் நிலையுற்றேன்.
அலை அலையாய்
கனவுகளை அள்ளி வீசினாய்,
ஒவ்வொரு கனவின் முடிவிலும்
நீ கண்டு இரசித்த காட்சிகளின்
பிம்பத்தில் கரை சேர்ந்தேன்.
நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
மறுபடியும் பாய்ந்து காணாமல் போகிறேன்
உன் கண்களெனும் பெரும் நதிக்குள்.

-கே.பாலமுருகன்