Tuesday, June 21, 2011

கவிதை: போர் முடிந்தது

சுவரோரம் வந்து நின்ற
சிறுமியின் கால்களில்
ஒட்டியிருந்தது போர்.

பாத வெடிப்புகளில்
ஒளிந்திருந்தார்கள்
போர் வீரர்கள்.

தரைப்புழுதியிலிருந்து
போர் ஆரம்பமாகும்
எச்சரிக்கை.