பறை- குரலற்றவர்களின் குரல்

மலேசிய தமிழ் இலக்கியத்தையும் மலேசிய இலக்கியத்தில் உருவாகியிருக்கும் மாற்றுச் சிந்தனையையும் ஒரு களமாக முன்னெடுக்கும் விதமாக அநங்கம் சிற்றிதழ் பங்காற்றி வந்தன. ஜனரஞ்சகத்தின் எல்லாம் சமரசங்களையும் நிராகரித்துவிட்டு விவாதத்தன்மையுடைய ஆழமான மதிப்பிடுகளுடன் இலக்கியம்-சமூகம்-மொழி-அரசியல் என அனைத்தையும் அழுத்தமாக முன்னெடுக்கும் வகையில் இனி அநங்கம் “பறை” என்கிற அடையாளத்துடன் வெளிவரவிருக்கின்றன.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் பாதுக்காப்பான வெளியை அடைந்த ஒரு சமூகம் அவர்களினும் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை ஒடுக்குவது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒடுக்கப்படுவர்களைப் பற்றி உரையாடுவதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு களத்தை உருவாக்கி தருவதே பறை இதழின் இலட்சியமாகும். அலட்சியப் படுத்தப்படுபவர்களும் நிராகரிக்கப் படுபவர்களும் புறக்கணிக்கப் படுபவர்களும் குரலற்ற குரலாக ஓங்கி ஒலிக்கும் அத்தனையையும் பறை சேகரித்துப் பிரதிபலிக்கும்.

பறை இதழுக்குப் படைப்புகளை அனுப்ப விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்:
bkbala82@gmail.com
bala_barathi@hotmail.com





பறை இணைய இதழ்: http://parai.vallinam.com.my/

மேல் விவரங்களுக்கு:

ஆசிரியர் : கே. பாலமுருகன்