Thursday, September 22, 2011

கவிதை: உணர்க்கொம்பு

எலும்புகள் சில்லிட
உறையும் பனிக்குள்ளிருந்து
திக்காக வடிகின்றன
உன்னைப் பற்றிய பதிவுகள்.
மரணத்திற்குத் தயாரான
வாய், மூக்கு, கைகள்
மூச்சிரைப்பு என
என் மீதிருந்த அழுக்குகளைக்
குவித்து திட்டுகளாக்கித் தடவுகிறேன்.
வாய் குளறும்போது
சொற்கள் தாரைதாரையாக வழிகின்றன.