Saturday, July 10, 2010

கவிதை: சப்தமின்றி

சப்தமின்றி
ஒரு தற்கொலை
நிகழ வேண்டுமென்றால்
மௌளனத்தால் நிரம்பிய
ஒரு வெளி
அமைய வேண்டும்.

அங்கு
இதற்கு முன்
வாழ்ந்தவர்களின் சொல்லப்படாத
சொற்களால் ஒரு பெருஞ்சுவர்
எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.

சுவரிலிருந்து ஒழுகும்
இயலாமைகளையும் வலிகளையும்
அள்ளிப் பருகி
சொற்களால் ஆன
பூத உடலைச் சிதைக்க வேண்டும்.

இப்பொழுது
சப்தமின்றி
ஒரு தற்கொலை
சாத்தியமாகலாம்.
அல்லது வரலாற்றில்
எப்பொழுதும்
ஒரு நத்தை மிக தாமதமாக
சில சொற்களைச் சுமந்து
கொண்டு வந்து சேர்வது
சாத்தியமென்றால்
மீண்டும்
தற்கொலை முயற்சி
தோல்வியடைகிறது.

கே.பாலமுருகன்
மலேசியா