Wednesday, April 20, 2011

கவிதை: நாட்டியம்

இரு பக்க புருவத்தையும் வளைத்து
கால்களை ஒருமுறை தரையில்
உதறிவிட்டு
என்னைப் பார்த்தாள்.

தொடை இரண்டையும்
மாற்றி மாற்றி அந்தரத்தில் வைத்து
உடலைச் சாய்த்தாள்.

பாடலின் ஒவ்வொரு முடிவிலும்
நிசப்தம் பரவ
அவளுடைய கண்கள்
உக்கிரமடைந்தன.