Friday, September 4, 2009

கே.பாலமுருகன் கவிதைகள்

1
ஒவ்வொருமுறையும்
ஏதையாவது பேசிவிட
தோன்றுகிறது
மார்க்சியம்
ஓஷோ
பாரதி
அரசியல்
உலக சினிமா
அகிரா குரொஷோவா
பாலிஸ்தீனம்
பின்நவீனத்துவம்
தத்துவ ஆய்வான
உரையாடல்களில்
விவாத மேடையில்
குறைந்தது
சினிமா விமர்சனத்தில்
இப்படி எதிலாவது
கலந்து கொள்ள
ஒவ்வொருமுறையும்
என்னைத் தயார்ப்படுத்திப்
பார்க்கிறேன்
வீட்டின்
முன்வாசல்வரைத்தான்
வர முடிகிறது
அதன்பிறகு
சரிந்து
கரைந்துவிடுகிறது
எனக்கான உலகம்

2
வீட்டைக் கடக்கும்
ஒரு குழந்தையாவது
சிறிது நேரம்
என் வீட்டின்
அருகாமையில் நின்று
விளையாடிவிட்டு போகாதா
என்று
என் பொழுதுகள்
விரைத்துக் கொண்டிருக்கும்

3
மீண்டும் மீண்டும்
வரைந்து பார்க்கிறேன்
குழந்தைகளின்
புகைப்படங்களை
என் வீட்டுச் சுவரில்
ஏனோ தெரியவில்லை
மறுநாள்
குழந்தைகள்
நகர்ந்து வெளிச்சுவரில்
காத்திருக்கின்றன

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.

1 comment:

Shakthiprabha (Prabha Sridhar) said...

//வீட்டின்
முன்வாசல்வரைத்தான்
வர முடிகிறது
அதன்பிறகு
சரிந்து
கரைந்துவிடுகிறது
எனக்கான உலகம்
//

//ஏனோ தெரியவில்லை
மறுநாள்
குழந்தைகள்
நகர்ந்து வெளிச்சுவரில்
காத்திருக்கின்றன//


கலக்கறீங்க.