Thursday, September 10, 2009

கே.பாலமுருகன் கவிதைகள்-2

1
தினமும் மீட்கிறேன்
என்னை
சில முரண்களிலிருந்தும்
இன்னும் சில மனிதர்களிடமிருந்தும்.

2
எல்லை கடந்தும்
மீதமாய் பின்தொடர்ந்தன
முள்வெளிகள்.

3
ஒவ்வொரு கதைகளிலும்
சொற்களைத் தொலைத்துவிடும்போது
காலியாகிறது எனக்கான இடம்.
ஒரு கதாபாத்திரமாய் உள்நுழைந்து
எனக்களித்த உரிமையுடன்
கதையை மீண்டும்
அடுக்குகிறேன்.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

No comments: