Thursday, October 29, 2009

கே.பாலமுருகன் கவிதைகள்


1
வர்ணங்களின் உதிர்தலுக்குப்
பிறகு
ஒரே எண்ணம்
ஒரே தோற்றம்
ஒரே பிம்பம்.
வெறுமை.

2
எனக்காக இருந்தவை
அனைத்தையும்
உனதாக்கிவிட்டு
மறைந்துவிடுகிறேன்
மலை இடுக்குகளில்
மழைத்துளிகளில்
வீட்டு அறைகளில்
இலைகளின் சுருளில்
இரவின் முணுமுணுப்பில்.

3
திரும்பவும் கேட்கின்றன
எப்பொழுதோ பேசிய
என் சொற்களின் ஒலி
அதே வெறுப்புடன்
அதே இயலாமையுடன்
அதே வலியுடன்.

கே.பாலமுருகன்
மலேசியா

2 comments:

Unknown said...

Nice ones Balamurugan.

கே.பாலமுருகன் said...

மிக்க நன்றி செல்வராஜ்.