Friday, October 9, 2009

கதவுகளில் படிந்திருக்கும் கைகள்

மேலும் சில தட்டல்களுக்குப் பிறகு
படிய துவங்கின கைகள்
சொற்ப ஓசைகளில் சில்லறை அலட்சியங்களில்
கைகளை விழுங்கும் கணத்தில்
திறக்கப்படாமலே திடமான
வெறுமையில்
சில கதவுகள்.


சிறு இடைவெளியில்
விட்டுப் போன கைகளின் நிழல்கள்
மீதமாய் படிந்திருந்த தட்டல்களின் ஒலிகள்
மீண்டும் தட்டிக் கொண்டிருந்தன
வெறும் கதவுகளை.

ஓசைகளை தட்டல்களை
கைகளை
உள்ளிழுத்துக் கொண்டன
கதவுகள்
தனது இல்லாமையின் வறுமையைச்
சரிக்கட்டிக் கொள்ள.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

No comments: