Sunday, August 23, 2009

இரயில் பயணம்


1
இரு ஆண்களுக்கு மத்தியிலான இருக்கை
பயணம் நெடுக காலியாகவே இருந்தது.
கால் வலிக்க இறுகியிருந்த பெண்களின்
நெரிசலுடன் இரயில் சப்தமின்றி
விரைந்து கொண்டிருந்தது.

2
சிறு இடைவெளியுமின்றி
ஒருவர் முகத்தை ஒருவர் உரசிக்கொண்டு
அடுத்தவர் சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டு
உடல் உறுப்புகள் பற்றிய கவனம் சிதறும்
ஓர் இரயில் பயணத்தில்.

அருகிலிருப்பவனின் அக்குளில்
புதைந்துவிட்ட மற்றவர்களின் முகங்கள்
தெரிவதற்குள்
சரிந்து விழுகின்றன உடல்கள்
ஒவ்வொரு நிலையத்திலும்.

உடல் வியர்த்துக்கொட்ட
ஒரு துர்நாற்றாமாக பரவுகின்றது
நெருக்கடியும் அதிருப்தியும்.
கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில்
யாரிடமிருந்தோ வந்திருந்த குறுந்தகவல்
சப்தமிடுகின்றது.
“நண்பா எப்படி இருக்கிறாய்?” என்று.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
bala_barathi@hotmail.com

No comments: